கர்நாடகத்தின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கர்நாடகத்தின் கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கை சனிக்கிழமை விடுக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மைய தகவலின்படி, கர்நாடகத்தின் தென்பகுதி மற்றும் உடுப்பி மாவட்டங்களில் 5 மி.மீ முதல் 115 மி.மீ வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநில தலைநகரான பெங்களூர் நகரின் வடக்கு பகுதியில் உள்ள அராசிகேரேவில் அதிக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.