இந்தியா

பிகாரில் அக். 28 தொடங்கி மூன்று கட்டங்களாகப் பேரவைத் தேர்தல்: ஆணையம்

ANI


புது தில்லி: பிகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

பிகாரில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், 2ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கும், 78 தொகுதிகளுக்கு 3ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

பிகார் சட்டப்பேரவைக்கு முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3-ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 7-ம் தேதியும் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, தேர்தல் தேதி குறித்து அறிவிக்க, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் கரோனா பெருந்தொற்று காரணமாக, இதுவரை 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் என்பதை மாற்றி, தற்போது 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்.

பிகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் ஒட்டுமொத்தமாக 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பிகாரில் உள்ள 243 தொகுதிகளில் 38 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில், 7 லட்சம் கிருமிநாசினி வழங்கும் அமைப்பு, 46 லட்சம் முகக்கவசம், 6 லட்சம் தற்பாதுகாப்புக் கவசம், 6.7 லட்சம் முகப்பாதுகாப்புக் கவசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் வீடு வீடாக வாக்குச் சேகரிக்க செல்லும் போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும்.  80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் சுநீல் அரோரா அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT