இந்தியா

மொஹாலியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி 

PTI

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 2 மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். 

மீரா மல்லி மொஹல்லாவில் உள்ள இரண்டாவது தளத்தின், கட்டுமானத்தில் உள்ள ஒரு கடையின் மேல் கூறை இன்று காலை இடிந்து விழுந்தது. 

இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலியானோரின் சடலங்களை கைப்பற்றப்பட்டன என்று மொஹாலி துணை ஆணையர் கிரிஷ் தயாளன் கூறினார்.

மேலும், கட்டட உரிமையாளர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கட்டடத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் கோபி, ராஜு மற்றும் ரமேஷ் என்று அடையாளம் காணப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். 

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதோடு, தேசிய பேரிடர் குழுவினர், கட்டடத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT