இந்தியா

சரத் பவாருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

DIN

வருமான வரித் துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத்பவாா் தெரிவித்தாா்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்த உறுதிமொழிப் பத்திரத்தின் அடிப்படையில் சில விளக்கங்களைக் கேட்டு வருமான வரித் துறை எனக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு எங்கள் மீது வைத்துள்ள பாசத்துக்கு மகிழ்ச்சி. தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கப்படும்’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த என்ன காரணம் உள்ளது? மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடிக்கு பெரும்பான்மை உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT