இந்தியா

நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 6 வரை நீட்டிப்பு

DIN

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான தனி வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சவ்கிக் இருவரும் கைது செய்யப்பட்டனர்.   

கைது செய்யப்பட்ட ரியாவிற்கு முதலில் விதிக்கப்பட்டிருந்த 14 நாட்கள் நீதிமன்றக் காவல் செவ்வாயன்று முடிவடைந்தது. இதையடுத்து விடியோ கான்பெரன்சிங் மூலமாக மும்பையில் உள்ள போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரியாவின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 6 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும், அந்த மனு மீது 23-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், அவர்களின் வழக்கறிஞர் சதீஷ் மனஷிண்டே தெரிவித்தார்.

சவ்கிக்கை மட்டும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, செவ்வாய் மாலை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT