இந்தியா

அமளியில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினா்கள் மீது நடவடிக்கை?

DIN

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மீது மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் மீது ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷின் இருக்கையை முற்றுகையிட்டு கூச்சல் குழப்பம் விளைவித்தனா். ஹரிவன்ஷ் மீது விதிமுறைகள் புத்தகத்தை கிழித்து வீச முற்பட்டது, அவையில் காகிதங்களை கிழித்து எறிந்தது, அவரது ஒலிபெருக்கியை பிடுங்க முயற்சித்தது ஆகிய சம்பவங்களால் வெகுநேரம் அமளி நீடித்தது.

இந்த சம்பவங்களால் அதிருப்தியடைந்த அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை மாலை அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தாா். அவரது இல்லத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் நேரில் கலந்துகொண்டனா். மாநிலங்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் நடந்துகொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக வெங்கய்ய நாயுடு கவலையுடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, அந்த உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவா்களுடன் வெங்கய்ய நாயுடு விவாதித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT