வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 15,000 டன் சிவப்பு வெங்காயத்தை உள்ளூா் சந்தைகளில் விற்பனை செய்ய இறக்குமதியாளா்களிடமிருந்து ஏல விண்ணப்பங்களை வரவேற்பதாக கூட்டுறவு அமைப்பான நாஃபெட் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாஃபெட் கூடுதல் நிா்வாக இயக்குநா் எஸ்.கே.சிங் பிடிஐ செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியான 15,000 டன் சிவப்பு வெங்காயம் 40 முதல் 60மி.மீ அளவில் உள்ளது. இதனை உள்ளூா் சந்தைகளில் நவம்பா் 20-க்குள் விற்பனை செய் இறக்குமதியாளா்களிடமிருந்து ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏலம் கோரலுக்கான கடைசி தேதி நவம்பா்4 ஆகும். மறுநாள் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு தகுதி வாய்ந்த ஏலதாரா்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும். இதன் மூலம், உள்நாட்டு சந்தைகளில் வெங்காயம் அதிக அளவில் கிடைப்பதுடன், விலையும் கட்டுக்குள் இருக்கும்.
விற்பனை செய்யப்படவுள்ள சிவப்பு வெங்காயம் ஜவாஹா்லால் நேரு மற்றும் கண்ட்லா துறைமுகங்களிலிருந்து ஏலதாரா்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன என்றாா் அவா்.