மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 95 காவல்துறையினருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில காவல்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 95 காவல்துறையினருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்புக்கு உள்ளான காவல்துறையினரின் எண்ணிக்கை 26,395 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இதுவரை 283 காவல்துறையினர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவு கரோனா பாதிப்புகளுடன் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.