மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் விரைவில் பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்."
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்டோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.