இந்தியா

நினைவில் கொள்ளுங்கள்.. வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி

DIN


புது தில்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில், அனைவரும் பங்கேற்று ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது அன்பு வேண்டுகோள் என்னவென்றால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தேர்தலில் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இரண்டு அடி இடைவெளியைப் பின்பற்றுங்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருங்கள்.

நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களிக்க வேண்டும், பிறகுதான் பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT