இந்தியா

ரூ.2.35 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகளைத் திருடிய நால்வர் கைது

ANI

புணேவில் விவசாயியிடம் இருந்து ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூட்டைகளைத் திருடிய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புணே புறநகர் காவல்துறையினர் நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புணேவில் வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகள் கடந்த 21-ம் தேதி திருடுப்போனதாக விவசாயி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 49 வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 9 வெங்காய மூட்டைகளை திருடர்கள் விற்றுவிட்டது தெரிய வந்துள்ளது.

வெங்காயம் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, வெங்காய வரத்துக் குறைந்ததால், விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் சில்லறை விற்பனையில் ரூ.100 தொட்டுவிட்ட வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது ரூ.100-க்குக் குறைவாக விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில்தான், விற்பனைக்காக வைத்திருந்த வெங்காய மூட்டைகளை நான்கு பேர் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT