இந்தியா

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

DIN


இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பெரை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார்.

அமெரிக்க உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பெர் 2+2 பேச்சுவார்த்தைக்காக இன்று இந்தியா வந்தடைந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்க் எஸ்பெரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, முப்படைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப் படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ். பதௌரியா மற்றும் கடற்படை தலைமைத் தளபதி கரம்வீர் சிங் ஆகியோர் உடனிருந்தனர். 

அமெரிக்கா, இந்தியா இடையிலான மூன்றாவது 2+2 அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் 4 முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன. பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு தகவல் பரிமாற்றம், ராணுவ கலந்துரையாடல்கள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படவுள்ளன.

முதலிரண்டு 2+2 அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 2018-இல் புதுதில்லியிலும், 2019-இல் வாஷிங்டனிலும் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT