இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 78,64,811: குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,78,123-ஆக அதிகரிப்பு

DIN


நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உள்ளது. தொற்றில் இருந்து இதுவரை 70 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 90.00 சதவீதமாகும்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 50,129 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 78,64,811-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 62,077 போ் குணமடைந்தனா். இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 70,78,123-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 90.00 சதவீதமாகும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 578 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,18,534-ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் 6,68,154 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 8.50 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 24-ஆம் தேதி வரை 10,25,23,469 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் 11,40,905 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT