இந்தியா

பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

DIN

ஜம்மு காஷ்மீரின் கெரான் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு ட்ரோனை இந்திய ராணுவம் சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியது.

இந்திய கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி வருகிறது. உளவு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய ட்ரோனை இந்திய ராணுவத்தினர் சனிக்கிழமை காலை சுட்டு வீழ்த்தினர்.

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான டி.ஜே.ஐ தயாரித்த இந்த ட்ரோன், இந்தியக் கட்டுப்பாட்டுப் பகுதியில் 70 மீட்டர் தூரத்தில் பறந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஆயுதங்களைத் தாங்கி வந்த இதேபோன்றதொரு ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT