இந்தியப் பகுதியிலிருந்து சீனர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்ற தேதியை பிரதமர் மோடி தனது உரையில் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களுடன் உரையாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்தார். இந்த உரை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், ராகுல் காந்தி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் தெரிவித்திருப்பதாவது:
"எந்தத் தேதியில் சீனப் படைகளை இந்தியப் பகுதியிலிருந்து வெளியேற்றுவீர்கள் என்பதை தயவுகூர்ந்து உங்களது 6 மணி உரையில் நாட்டு மக்களிடம் அறிவியுங்கள்."