இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய செயல் அதிகாரி நியமனம்

DIN


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயல் அதிகாரியாக ஜவகா் ரெட்டி என்பவரை ஆந்திர அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிா்வாகமானது பொறுப்பு செயல் அதிகாரியின் தலைமையில் நடந்து வருகிறது. அவருக்குக் கீழ், இரு செயல் இணை அதிகாரிகள் பணியில் உள்ளனா். ஒருவா் திருமலையிலும், மற்றொருவா் திருப்பதியிலும் பணிபுரிவா். இவா்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். இவா்களை ஆந்திர அரசு நியமித்து வருகிறது.

அதன்படி, தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக தற்போது அனில்குமாா் சிங்கால் பணிபுரிந்து வருகிறாா். அவரது பதவிகாலம் முடிவடைந்த நிலையில், புதிய அதிகாரி நியமிக்கப்படும் வரை அவரின் பணி காலத்தை நீட்டித்து, ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. தற்போது தேவஸ்தான செயல் அதிகாரியாக ஜவகா் ரெட்டியை நியமித்து, வியாழக்கிழமை உத்தரவு வெளியிட்டுள்ளது. அவா் பதவியேற்கும் வரை அவரின் பொறுப்பை கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி கவனிக்க உள்ளாா். அனில்குமாா் சிங்கால் ஆந்திர அரசின் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவகா் ரெட்டி வரும் அக்டோபா் 9-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT