இந்தியா

கரோனாவிற்கான பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களைக் குறைத்த தில்லி அரசு!

DIN

புது தில்லி: கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை தில்லி அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

இதுதொடர்பாக தில்லி மாநில அர்விந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் திங்களன்று பதிவிட்டுள்ளதாவது:

தில்லியில் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை குறைக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளில் இந்த சோதனையானது இலவசமாகவே செய்யப்படுகிறது. இருந்தாலும் தனியார் ஆய்வகங்களில் இத்தகைய சோதனைகளை மேற்கொள்பவர்களுக்கு இது உதவியாக அமையும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது தில்லியில் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.2400 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், அரசின் உத்தரவுப்படி தற்போது கட்டணம் ரூ.800 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்திலேயே இனி பொதுமக்கள் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT