தில்லியில் புதிதாக 5,482 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தலைநகரில் நோய்த்தொற்று பாதித்தோா் மொத்த எண்ணிக்கை 5,56,744 ஆகியுள்ளது. அதேபோல் நோய்த்தொற்று பாதித்தோரில் வெள்ளிக்கிழமை 98 போ் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,909-ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் கரோனாவிலிருந்து 553 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்ததை அடுத்து, நோய்த்தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 5,09,654-ஆக உள்ளது. 38,181 போ் சிகிச்சையில் உள்ளனா். தலைநகரில் கரோனா பாதிப்பை கண்டறிய புதிதாக 28,100 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளும், 36,355 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன என்று தில்லி சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.