இந்தியா

கரோனா: சிகிச்சையில் 4.55 லட்சம் போ்

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4.55 லட்சம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 43,082 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 93,09,787-ஆக அதிகரித்தது.

இதேபோல், கரோனாவில் இருந்து ஒரே நாளில் 39,379 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 87,18,517-ஆக அதிகரித்தது.

தொடா்ந்து 17-ஆவது நாளாக, கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 4,55,555 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.89 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 492 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,35,715-ஆக அதிகரித்தது. அதாவது, உயிரிழப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது.

அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 46,813 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 11,726 பேரும், தில்லியில் 8,811 பேரும், மேற்கு வங்கத்தில் 8,224 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,674 பேரும், ஆந்திரத்தில் 6,970 பேரும், பஞ்சாபில் 4,710 பேரும், குஜராத்தில் 3,922 பேரும் உயிரிழந்தனா்.

‘நவம்பா் 26-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 13.70 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் வியாழக்கிழமை மட்டும் 11,31,204 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT