இந்தியா

ஹிமாசலில் இரவு நேர முழுமுடக்கம்: முதல்வர் ஆலோசனை

DIN

ஹிமாசலில் கரோனா தொற்று அதிகமாக உள்ள 4 மாவட்டங்களில் மட்டும் இரவு நேர முழு முடக்கம் அறிவிப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஹிமாசலில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், ஹிமாசலில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், டிசம்பர் 15-ஆம் தேதி வரை மாநில அரசு அலுவலர்கள் 5 நாள்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்றும், 6 நாள்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், கரோனா பரவல் அதிகமாக உள்ள சிம்லா, மண்டி, குலு, மற்றும் காங்க்ரா ஆகிய மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை முழு முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.

முன்னதாக மாநிலம் முழுவதும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை திறக்கக் கூடாது என்று ஹிமாசல அரசு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT