மகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் 5,965 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 5,965 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,14,515 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 3,937 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 16,76,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46,986 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 18,14,515 பேர் சிகிச்சியில் உள்ளனர். 5,28,462 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.