இந்தியா

தில்லியில் விவசாயிகள் பேரணிக்கு தடை: எல்லைகளை மூடியது ஹரியாணா

DIN


புது தில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் வியாழக்கிழமை பல்வேறு மாநில விவசாய சங்கங்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு தில்லி போலீஸார் தடை விதித்துள்ளனர். மேலும், தில்லியின் அண்டை மாநில எல்லைகளில்    இருந்து விவசாயிகள் உள்ள வராதவாறு போலீஸார் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஹரியாணாவில்... இதேபோல், ஹரியாணா அரசும் அண்டை மாநிலமான பஞ்சாபில் இருந்து விவசாயிகளைத் தடுத்து எல்லைகளை மூடி 114 தடை உத்தரவைப் பிறப்பித்தது. தடையை மீறி மாநிலத்துக்குள் வர முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் டிராக்டர்களில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.

மேலும், பஞ்சாபுக்கு செல்லும் பேருந்துகளையும் நவம்பர் 26,27-ஆம் தேதி வரை ஹரியாணா அரசு நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு, பாரதிய கிஸான் யூனியன் ஆகியவை இணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்கிற அமைப்பை அமைத்து போராட்டத்தில் களம் இறங்கியுள்ளன. 
இந்த விவசாய அமைப்புகள் நவம்பர் 26,27 தேதிகளில் தலைநகர் தில்லியில் "டெல்லி சாலோ' பேரணியை நடத்த இருந்தனர். இதை முன்னிட்டு தில்லியை இணைக்கும் 5 முக்கிய நெடுஞ்சாலைகள் வழியாக தில்லிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், தில்லி புது தில்லி காவல் துணை ஆணையர் புதன்கிழமை தனது சுட்டுரையில், "தில்லியில் விவசாயிகள், நவம்பர் 26,27 தேதிகளில் பேரணி நடத்த கொடுத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் விவசாயிகள் ஒன்றுகூட வேண்டாம். தில்லி போலீஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் பேரணிக்கு 500க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
தமிழகத்திலிருந்தும் சில விவசாய சங்கங்கள் இதில் பங்கேற்க இருந்தனர். குறிப்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தில்லி வர இருந்தனர். ஆனால் அவருக்கு உள்ளூர் போலீஸார் அனுமதி மறுக்கவே திருச்சியிலேயை அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சட்டங்கள் பெருநிறுவனங்களுக்குத்தான் பலனளிக்கும் என்பதால் அவர்களின் தயவை விவசாயிகள் நம்பியிருக்க வேண்டும் என்றும் விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT