புது தில்லி: லேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை வரும் விரைவில் அமலாகிறது.
லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசி எண்களில் இருந்து அலைபேசி(மொபைல்) எண்களை அழைத்துப் பேசுவதற்கு, இதுவரை குறிப்பிட்ட பத்து இலக்க மொபைல் எண்ணை மட்டும் அழுத்திப் பேசினால் போதுமானதாக இருந்தது.
இந்நிலையில் லேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை வரும் விரைவில் அமலாகிறது.
அதன்படி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் லேண்ட் லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னாள் பூஜ்யம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.