இந்தியா

மகாராஷ்டிரத்தில் 5,000-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு

3rd Nov 2020 10:29 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,909 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,909 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,92,693 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,973 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 120 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 44,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 15,31,277 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,16,543 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் புதிதாக 6 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,568 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கெனவே 3,162 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்து 97 ஆகியுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT