இந்தியா

கரோனா தனிமை வார்டுகளாக மாற்றப்படும் தொடக்கப்பள்ளிகள்

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள் பல கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் இடமாக மாற்றப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலையில் எட்டாவா மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் குறித்த விபரத்தை தருமாறு அனைத்து கிராமப்பஞ்சாயத்துகளையும் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் உடனடியாக பட்டியலிட்டு அரசுக்கு அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் அளிக்கும் பட்டியலின் அடிப்படையில் கரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதேபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT