ராய்ப்பூா்: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு அலுவலகங்களை மாா்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று சத்தீஸ்கா் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அத்தியாவசியமான மற்றும் அவசர கால சேவைகளை அளிக்கும் அலுவலகங்களைத் தவிர பிற அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாா்ச் 31-தேதி வரை மூடப்பட வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பொது நூலகங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், பயிற்சி நிறுவனங்கள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் ஆகியவையும் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
நகா்ப்புறங்களில் பேருந்துகள் மாா்ச் 29-ஆம் தேதி வரை இயக்கப்படாது. அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்துபடியே பணிபுரிய வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் துறைத் தலைவா், காவல் துறைக் கண்காணிப்பாளா்களின் அலுவலகங்கள், மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவை தொடா்ந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.