இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவா் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

பாராமுல்லா மாவட்டத்தின் சோபோா் பகுதியில் ஓரிடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியை வியாழக்கிழமை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

அவா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியிலிருந்து தப்பியோடிய எஞ்சிய பயங்கரவாதிகளை தேடி வருகிறோம் என்று காவல்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT