இந்தியா

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

DIN

தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

தில்லியில் கரோனா தடுப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால், கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தில்லியில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இது குறித்து பேசிய தில்லி காங்கிரஸ் தலைவர் அணில் செளத்ரி, ''தில்லியில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனினும் ஆம் ஆத்மி அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டது. '' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT