இந்தியா

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைப் பிடித்த கிராமத்தினர்

DIN


முசாபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகேயுள்ள மோர்னா பகுதியில் திருமண நிகழ்விற்காகச் சென்ற 12 வயது சிறுமியிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியைக் கடத்திச் சென்று அப்பகுதியிலிருந்த கரும்புத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது சிறுமி கூச்சலிட்டதில் அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து குற்றவாளியைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT