திருப்பதி: ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.55 கோடி வசூலானது.
திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை புதன்கிழமை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.55 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.