உணவே மருந்து

வலிமையான உடலைப் பெற உதவும் சூரணம்

கோவை பாலா

வலிமையான உடலைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கசகசா பாதாம் பருப்புச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள். 

தேவையான பொருள்கள்

கசகசா                             -    100  கிராம்

முந்திரிப் பருப்பு          -     100 கிராம்

பாதாம் பருப்பு             -     100 கிராம்

செய்முறை

முதலில் கசகசா, முந்திரிப் பருப்பு  மற்றும் பாதாம் பருப்பு இவை மூன்றையும் எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்துப் பொடி செய்து கொள்ளவும்.

பயன்கள்
இந்த சூரணம் உடலை வலுப்பெறுவதற்கு உதவும்  அருமருந்தாகும். வலிமையான உடலைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து ஐந்து கிராம் அளவு எடுத்து காலை மற்றும் மாலை என இருவேளையும் வெறும் வாயில் போட்டு சப்பி சாப்பிடலாம் அல்லது சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT