ஒடிசாவில் ரயில் விபத்து நேரிட்ட பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆய்வு மேற்கொண்டார்.விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி விபத்துக்கான காரணம் குறித்தும் பாதிப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் விளக்கினர்.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் அதுல் கர்வால் தெரிவிக்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது இது மிகவும் மோசமான விபத்து என்றார்.மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டனர்.மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் சுமார் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.சுமார் 900-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ராணுவம், ரயில்வே, தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலான்மை குழு, மாநில அரசு ஆகியவை மீட்பு பணியில் களமிறங்கின.விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.விபத்துக்குள்ளான இடத்தில் சேதமடைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள்ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-வது மிகப் பெரிய விபத்து என்று கூறப்படுகிறது.தடம்புரண்ட ரயில் பெட்டிகள் ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்து கிடக்கும் காட்சி.ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தாறுமாறாக சிதறிக் கிடக்கும் காட்சி.உருக்குலைந்து கிடக்கும் பெட்டிகளில் மீட்புப் பணிகள் தீவிரம்.இந்திய ரயில்வே வரலாற்றில் மூன்றாவது மோசமான விபத்து என தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் அதுல் கர்வால்தெரிவித்துள்ளார்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.ரயில்வே, மத்திய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டி.ரயில் பெட்டிகள் சிதறிக் கிடக்கும் காட்சி.தடம்புரண்ட ரயில் பெட்டிகள்.சேதமடைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள்.விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.மிகவும் மோசமான விபத்து.விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடைபெறும் என்று தெரிவிப்பு.ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.உருக்குலைந்து ரயில் பெட்டி.தடம்புரண்ட ரயில் பெட்டிகள்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனக்கூறியுள்ளார்.பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.