விமானப் படையில் இணைக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் - புகைப்படங்கள்
DIN
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் ஜோத்பூரில், அதன் அறிமுக விழாவின் போது விமான படையில் இணைக்கப்பட்டது.லைட் காம்பாட் ஹெலிகாப்டரான 'பிரசாந்த்' உற்பத்தி ஆகஸ்ட் 2017ல் முறையாகத் தொடங்கப்பட்டு, இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.எதிரி நாட்டு ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஹெலிகாப்டர்.பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் இன்று முறைப்படி இணைக்கப்பட்டது.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் அருகில் சீறிப் பாயும் Su-30MKI போர் விமானம்.5.8 டன் எடை கொண்ட இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டரில், ஏவுகணைகள் உள்ளிட்ட பல ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்தலாம்.ஜோத்பூரில், விழாவில் உரையாற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி ஆகியோர்.