மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியினை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.மருத்துவமனையில் மருத்துவருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.