மாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்
DIN
சங்க இலக்கியங்களிலும் போற்றப்பட்டு இந்த விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் கொண்டாடப்படுவதும் மகிழ்ச்சியே.மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை நன்றாக குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளில் வண்ணங்களைத் தீட்டி அலங்காிப்பா்.குளிப்பாட்டிய மாடுகளின் கொம்புகளின் உச்சியில் உலோகத்தாலான சிறுசிறு தொப்பிகளை அணிவிப்பர்.முற்காலத்தில் பெண்களை மணக்க வேண்டுமென்றால், அப்பெண்ணின் வீட்டுக் காளையை அடக்க வேண்டும்.மாட்டுப் பொங்கல் அன்று மக்கள் ஒன்றுகூடி புதிய அறுவடைக்கு நன்றி கூறியும், புதிய ஆண்டை வரவேற்றும் கொண்டாடுவா்.குளியல் போடும் கால்நடைகள்.பெரிய கொம்புகள், உயரம், திமில்கள் என பிரமிக்க வைக்கும் காளைகள்.மாட்டுப் பொங்கலை ஒட்டி கோவில்களில் உள்ள கோ சாலைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.கால்நடைகளுக்கு மலா் மாலைகள் அணிவித்தும், கழுத்தில் மணிகளைக் கட்டியும், பலவண்ண போா்வைகளை காளைகளின் மீது விாித்துப் அலங்கரிக்கப்படும்.எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் இல்லாமல், ஒவ்வொரு நாளும் வாழ வைத்து வரும் மாடுகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.மாடுகளின் நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டு வைத்து மாடுகளுக்கு பூஜை செய்தும் மகிழும் மக்கள்.