பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கியது- புகைப்படங்கள்
DIN
பரிசுத் தொகுப்பாக குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு வழங்கப்படுகிறது.பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் பழனிசாமி கடந்த மாதம் தனது தேர்தல் பரப்புரையின் போது அறிவித்தார்.கரோனா தொற்று நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, ஒருநாளை முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என பிரித்து பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.டோக்கனில் குறிப்பட்ட நாள் படி பொருட்கள் வாங்க முடியாவிட்டால், கடைசி நாளான 13-ந்தேதி சென்று வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படுகிறது.