தடுப்பூசிபோட விரும்பும் நபர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுரை.ஒத்திகையைப் பார்வையிடும் சுகாதாரத் துறைச் செயலாளர்.ஒத்திகை பணியில் சுகாதாரத் துறை ஊழியர்.ஒத்திகை பணியில் சுகாதாரத் துறை ஊழியர்.ஒத்திகை பணியில் சுகாதாரத் துறை ஊழியர்.தமிழகத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு ஒத்திகை நடைபெற்றது.சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுதாங்கல் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.கரோனா தடுப்பூசி போட்டதற்கான குறுஞ்செய்தி அவரவர் செல்போன்களுக்கு அனுப்பப்பட்டது.