மீண்டும் சுற்றுலாத் தலமாக மாறுமா கொளவாய் ஏரி - புகைப்படங்கள்
DIN
செங்கல்பட்டு ரயில் நிலையத்தைஒட்டி அமைந்துள்ள கொளவாய் ஏரி, செங்கல்பட்டில் உள்ள ஏரிகளில் முக்கியமானது.நீர் நிரம்பிய நிலையில் கடல் போல் காட்சி அளிக்கும் கொளவாய் ஏரி.கொளவாய் ஏரியின் நீர் மூலம் 627 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் தமிழக அரசு ஏரியை புனரமைத்து, தூர்வாரி, படகு சவாரி மேற்கொள்ள ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.ஏரியின் மையப்பகுதியில் 3 இடங்களில் தீவுகள் அமைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா விரைவில் அமைக்கப்படுகிறது.கொளவாய் ஏரி விரைவில் புதுப்பொலிவைப் பெற்று ஒரு சுற்றுலாத் தலமாக மீண்டும் மாறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு.