பகத் சிங் குறித்து பலரும் அறியாத உண்மைகள் - படங்கள்
DIN
இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங்.இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான 'இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு' அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.பகத்சிங்கின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினர். ஆனால் பகத்சிங் தனது முழு வாழ்க்கையையும் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அர்பணித்தார்.1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.இந்திய வரலாற்றில் தனிப்பட்ட இடத்தை பிடித்த பகத்சிங்.பகத்சிங்கின் இறப்பு, பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது.