தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - புகைப்படங்கள்
DIN
பள்ளிக்கு வரும் மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதும், சானிடைசர் வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.முககவசம் அணிந்து கொண்டு பள்ளிக்கு வரும் மாணவிகள்.பள்ளிக்கு வரும் மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் ஆசிரியர்.பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் பெற்றோரிடமும் ஒப்புதலுக்கான அனுமதிக் கடிதம் கட்டாயம் பெறவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மாணவர்களின் நலத்தை முன்னிட்டு அவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளது.நோய்த்தொற்று முன்னெச்சரிக்கையாக வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகப்பட்டது.முதற்கட்டமாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முகக் கவசம் அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் அமர்ந்த மாணவிகள்.ஓர் வகுப்பில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதோடு, மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.சக தோழிகளுடன் 11ஆம் வகுப்பு மாணவிகள்.அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.