பாதுகாப்பு உடை அணிந்துவந்து வாக்களித்த கனிமொழி எம்.பி - படங்கள்
DIN
பாதுகாப்பு உடை அணிந்துவந்து வாக்களித்த எம்.பி கனிமொழி.கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்கு செலுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.கிருமித் தொற்று காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.கரோனா நோயாளிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய கனிமொழி.மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணித் தலைவருமான கனிமொழி வாக்களித்த பிறகு..கனிமொழி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நிலையில், இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றன.மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணித் தலைவருமான கனிமொழி.வாக்களித்த பிறகு மீண்டும் மருத்துவ வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.