ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தி விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் காலமானார்.மெலடி குயின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.லதா மங்கேஷ்கர் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இந்தூரில் பிறந்தார்.தந்தையின் நாடகங்களில் லத்திகா என்னும் பாத்திரத்தில் அவர் நடித்து வந்த நிலையில் அவரை லதா என்று அழைக்கத் தொடங்கி, அதுவே அவரது பெயராக மாறி போனது.லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.கலைத் துறையில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருதை 2001ஆம் ஆண்டு லதாவுக்கு வழங்கப்பட்டது.தனது 13வது வயதில் பாடல்களை பாடத் தொடங்கினார் லதா.கமல்ஹாசன் நடிப்பில் சத்யா திரைப்படத்தில் ‘வளை யோசை கலகலவென’, பிரபு நடித்த ஆனந்த் படத்தில் ‘ஆராரோ ஆராரோ’, 'எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்' உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்.சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார் லதா மங்கேஷ்கர்.பழம் பெரும் பாடகியான லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.பழம் பெரும் பாடகியான லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி.