ஆவணி மாதத்தின் வளர்பிறை நாளன்று விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மக்களின் துன்பங்களையும், தடைகளையும் நீக்கி அருள்பவர் விக்னேஸ்வரன்.எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி.கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபடுவதும் வழக்கம்.விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது சேலம் இல்லத்தில் குடும்பத்தினருடன் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு கணேஷ் கோவிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரார்த்தனை செய்கிறார்.