தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வரும் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 6,26,74,446 வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.. இவர்களில் 3.08 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.18 கோடி பேர் பெண் வாக்காளர்கள். அதாவது ஆண்களை விட சுமார் 10 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் 7,246 மூன்றாம் பாலினத்தவர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது..