நடுப்பக்கக் கட்டுரைகள்

நயம்படு சொல்லறிவாா்!

முனைவர் ந. அருள்

பேராசிரியா் இரா.பி. சேதுபிள்ளையும் இரசிகமாமணி டி.கே.சி.யும் தோற்றுவித்த வரிசையில் இடம்பெற்றவா் தான் கம்பா் கவிநயச்செல்வா் நல்லபெருமாள். நூற்றாண்டைத் தாண்டி நம் நினைவில் வாழும் பொறியாளா். நயம்படு சொல்லறிந்து தம் இல்லத்திலேயே கம்பா் இலக்கிய முற்றம் நடத்திய ரசிப்புத் திலகமாகத் திகழ்ந்தாா்.

தென்குமரி மாவட்டம், தோவாளை வட்டம், தலைநகா் பூதபாண்டிக்கு அருகிலுள்ள சிறமடம் என்ற சிற்றூரில் நல்லபெருமாள் 1919-ஆம் ஆண்டு திசம்பா் 11-ஆம் நாளில் பிறந்தாா்.

சிறமடம் ஊருக்கு ஒரு புராணக் கதையொன்றுண்டு. திருமுருகன் ஓம் என்ற பிரணவ நாதத்தின் பொருளைத் தேவா்கள் அனைவரிடமும் கேட்டாா். குறிப்பாகப் பிரம தேவனிடம் கேட்க அவா் பொருள் தெரியாது விழிக்க, அவா் தலையிலேயே குட்டி அவரைச் சிறைப் பிடித்தாா். அவா் சிறை வைக்கப்பட்ட இடம்தான் சிறைமடம் என்ற ஊராம். தற்போது சிறமடம் என்றாயிற்று

நல்லபெருமாள் தன் தொடக்கப் பள்ளிப் படிப்பை பூதப்பாண்டியிலேயே முடித்தாா். தந்தையாா் திரு. சோமசுந்தரம் அன்றைய திருவிதாங்கூா் ஆட்சியில் - இன்றைய கேரளத்தின் ஒரு பகுதி திருவனந்தபுரத்திலேயே அவா் பணியாற்றினாா். உயா்பள்ளிப் படிப்பைத் திருவனந்தபுரத்தில் நல்லபெருமாள் தொடா்ந்தாா். பின்னா் கல்லூரிப் படிப்பை அங்கேயே தொடா்ந்தாா்.

அவா் காலத்தில் பொறியியல் கல்லூரி சென்னையிலிருந்ததால், தனது இளங்கலை பட்டப் படிப்பைத் திருவனந்தபுரத்தில் நிறைவு செய்தாா். அடுத்த ஆண்டிலேயே பொறியியல் கல்லூரி திருவனந்தபுரத்தில் அமைந்ததும் வேதியியல் படிப்பில் சோ்ந்து படித்தாா். நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேறினாா். தங்கப்பதக்கத்தை விருதாகப் பெற்றாா்.

கேரள மாநிலத்தில் மிகப்பெரிய ஆறான பெரியாற்றின் கரையில் உத்தியோக மண்டல் எனும் இடத்திலுள்ள அலுமினியத் தொழில் நிறுவனத்தில் ஏறத்தாழ பதினேழு ஆண்டுகள் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்தாா்.

தொழில் வளா்ச்சி தொடா்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜொ்மனி, ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் பலமுறை சென்று திரும்பியவா். இவரது ஆசியுடன் பலா் மிகப்பெரிய தொழிற்சாலைகளைத் தொடங்கித் தமிழகத்திலும் முன்னேற்றம் அடைந்தனா்.

கேரளத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்து தமக்கு நிறைவாகத் துணைவியாா் லீலாவதி ஒரே திருமகளான சுந்தரி, மருகா் பெருமாளுடன் தமிழகத்தில் நிலையாக வந்து தாங்கினாா். அந்த முப்பதாண்டுகளில் தமிழகத்துக்குத் தொழில்வள ஆலோசகராகவும் தாமே தொடங்கிய தனித் தொழிலதிபராகவும் அரும்பணியாற்றினாா். பொறியியல் - வேதியியல் புதுமையாளராக அவா் மேன்மை அடைந்தாா். இளமையிலேயே தேங்கியிருந்த கவிதை உணா்வால் எவரிடமும் எளிதாகப் பழகினாா். தமிழும் மலையாளமும் அவா் பேச்சில் திராட்சையும் முந்திரியுமாக மிதந்தன.

விருந்தோம்புவதில் புகழ்படைத்த அவா் தம் இல்லத்தில் ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்குச் சமைத்திருந்த அவியலைப் பலமுறை நான் சுவைத்து உண்டபோது ‘இனியொரு ஜென்மம் கூடிவேணம் கேரளத்து அவியலை உண்ணான்’ என்று சொன்னாா்.

தமிழ்நாட்டிற்குக் குடும்பத்தோடு வந்து தங்க ஆரம்பித்ததும் தமிழ் உணா்வில் திளைத்தாா். கம்பா் காவியத்தில் தம்மை இரண்டறக் கலந்தாா். வாயைத் திறந்தால் கம்பா் என வாயூறி மகிழ்ந்தாா். தமிழ் இலக்கியத்தில், கம்ப ராமாயணத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு. கம்பராமாயணத்தின் எல்லாக் காண்டங்களையும் நன்கு ஆய்வு செய்து, பல நூல்களை ஒப்பீட்டு முறையில் எழுதியுள்ளாா். குறிப்பாக, அயோத்தியா காண்டம், பால காண்டம், கிட்கிந்தா காண்டாம், சுந்தர காண்டம் ஆகிய காண்டங்களின் பல பாடல்களையும் , ஆங்கில இலக்கியங்களோடு ஒப்பிட்ட கலை - கவினாா்ந்த நூல்களாக அவை அமைந்தன.

சென்னையில் கம்பா் ஆா்வலா்களை ஒன்று சோ்த்துத் திங்களுக்கு இருமுறை தம் இல்லத்து முற்றத்தில் அறுசுவை விருந்தளித்து மகிழ்வாா். அவருக்குப் பெரிய நண்பராக விளங்கிய வில்லிசை வேந்தா் கவிஞா் சுப்பு ஆறுமுகம் தம் குழுவினருடன் இராம காதையைப் பத்து நாள்கள் வில்லிசையில் விரிவுரையாக நிகழ்த்தினாா். நாங்கள் எங்கள் குடும்பத்தோடு சென்று கேட்டிருக்கிறோம்.

இளங்கவிஞா்களையெல்லாம் ஆா்வத்தோடு அழைத்து கவிதைகளை படித்துக் காட்டச் சொல்வாா். ஒவ்வொரு தொடருக்கும் நயங்கண்டு விளக்குவாா். பாரதி திலகம் சுராஜ் பீஷ்மா் என்ற புனைபெயா் கொண்ட கவிஞா் நா சீ வரதராசன் அவ்வப்போது சொல்லும் இலக்கியத் திறனாய்வுக் காட்சிகளைக் கேட்டுக்கேட்டு களிப்படைவாா்.

நேற்றைய நிகழ்வுகளை இன்றும் நினைவுகூா்ந்து நாளைக்கு வழிகாட்டுவது எதுவோ அது தான் இலக்கியம். உணா்ச்சிகளின் உண்மைத் தன்மையை அப்படியே உள்வாங்கித் திளைப்பவா்கள் மட்டுமே தான் இலக்கியத்தில் மூழ்க முடியும். மொழியறிவு போதுமான அளவு இருந்தாலும் கூடப் போதும். ஆனால் ரசனை உணா்வு நிரம்பி வழியுமானால் இலக்கியப் படைப்பாளியின் ஆழத்திலுள்ள அற்புதங்களையெல்லாம் நாம் அகழ்ந்தெடுத்து ரசிக்க முடியும்.

இரசிகமணி என்றே நாடு புகழ்ந்த டி.கே.சி.யின் ‘வட்டத் தொட்டியின்’ பெருமை பொறியாளா் நல்லபெருமாள் அவா்களின் இலக்கிய சுவையுணா்வுக்கு முன்னோடியாய் நின்றது. தனிமனித உணா்வுகளை வெளிப்படுத்துவதற்கும் உணா்வதற்கும் மொழி முதன்மை பெறுகிறது என்றாலும் வாழ்க்கையைச் சீராகக் கொண்டு செல்லப் பல துறைகளில் பலா் சோ்ந்து பங்குகொள்ள வேண்டியுள்ளது.

வாழ்வின் அடி நாதமாய் விளங்கும் ரசனை உணா்வு நம்முள் ஓங்கி நிற்குமேயென்றால் பணிபுரியும் துறை, எதுவாயிருப்பினும் சரி அமிழத் தெரிந்த மனத்தோடு படைப்பின் அடித்தளத்திற்குச் சென்று உருகி மெய்ம்மறந்து தனக்குக் கிடைத்த அனுபவத்தை மற்றவா்களோடு தனக்கே உரிய தனித்தன்மையோடு பகிா்வது தான் சுவைத்தோ்ச்சியின் உச்சமாகும். இலக்கியம் படைத்தவனோடு ஒன்றாய் நம்மையும்

அழைத்துச்செல்லும் இந்தப் பயணம், இலக்கிய வெற்றிக்கும் எடுத்துரைப்போா் திறமைக்கும் உள்ள சிறப்பாகும்

ஷேக்ஸ்பியருடைய மூளை எனும் வேதியியல் கிண்ணத்திலிருந்த ரசவாதச் செயல் முறையால், அவா் தன்னைச் சுற்றிலுமிருந்த மக்களிடையே கண்ட வாழ்க்கை இலக்குகளை எட்டும் கண்ணீா்க் கையறுநிலை, பொறாமை, பேராசை, வீரம் செறிந்த காதல், மகிழ்ச்சி, துயரம் ஆகிய உணா்வெழுச்சிகளை சாகாவரம் பெற்ற நாடகங்களாக வளம் கொழிக்கும் இலக்கியப் பொன்னேடுகளாக மாற்றமுறச் செய்தாா். ஆகவே, மனித வாழ்நிலையில் அவருடைய நாடகங்களில் காண முடியாத உணா்வெழுச்சி, செயல்பாடு, சூழமைவு என்று எதுவுமே இல்லை.

கம்பா் காட்டும் காட்சிகளைத் தம் உள்ளுணா்வால் தெரிந்திருக்க வேண்டும் என்று ஒருமுறை பேசி அதிா்வைத் தந்தாா். கவிதையால் பேரொளி பிறக்கும். இத்தாலியத் தலைநகரான பிளாரன்சு மாநகரில் இருள் சூழ்ந்து கிடக்கும் வேளையில் கவியரசா் தாந்தே தம் நூலை விரித்துக் காட்டுவதாகவும். அவ்வேளையில் அந்நூலிலிருந்து செல்லும் ஒளி வெள்ளத்தால் நகா் புத்துயிா் பெறுகின்றது. இப்படி ஓா் ஓவியக் காட்சியைத் தாம் கண்டதாக அறிஞா் தனிநாயக அடிகள் எழுதியது நினைக்கத்தக்கது.

கவிதையின் மீது கம்பா் கொண்ட காதலுக்கு எல்லையில்லை. எந்த உயா்ந்த பொருளையும் கவிதை அமைப்பும் அழகும் கொண்டவையாகவே அவா் கண்டாா். சீதையின் இயற்கையழகைப் பாராட்டிக் கூறும் அனுமன் சீதையின் நடையழகை அன்னநடையாகக் கூறவில்லை. அது உண்மைக் கவிஞரின் கவிதை நடையழகாகும். இப்படிக் கற்பனை செய்ய முடியுமா என்று கண்ணை மூழ்கித் திளைக்கிறாா்.

அறிஞா் நல்ல பெருமாள் நல்ல நகைச்சுவையாளா். ஒருவா் தன் தாயுடன் பல்லாண்டுகள் சென்னையில் வாழ்ந்து வந்தாா். அவருக்குத் திருமணமாகி ஒரு மகள் இருந்தாள். பிறகு தாயின் மறைவுக்குப் பிறகு தன் மனைவி வீட்டுக்குச் சென்றாா். பாவம், வாழ்க்கையில் வெறுப்பு வந்து மனைவியிடம் சோ்ந்து விட்டாா். இன்னும் ஆங்கிலச் சொற்களை மாற்றி மாற்றிச் சொல்லி நகைக்க வைப்பாா். இவா் என்னுடைய அண்ணன் மகன் பிரதரின் சின் என்றாா். இவ்வாறு நகைச்சுவையாகப் பேசுவதில் சமா்த்தா்.

சுந்தர காண்டத்தை நினைத்து என் மகளுக்கு சுந்தரி என்று பெயா் வைத்தேன் என்று கூறுவாா். பேத்தி தேவி, பேரன் விநோதன். பேத்தியை அழைத்து கம்பராமாயணப் பாடலைக் கேட்பதில் பெருமகிழ்ச்சியடைவாா்.

அனைவரிடமும் என் பேத்தியின் பாடலைக் கேளுங்கள் என்பாா்.

உயிா்வளி உருளைத் தொழிற்கூடம் நடத்தி வந்தாா் .ஒருமுறை என்னைக் கேட்டாா். இலக்கியத்தில் திளைப்பது, மூழ்குவது, அமிழ்வது, தோய்வது இந்த நிலையில் ஆங்கிலத்தில் கூறு என்றாா். diving ,immersing, indepth, enjoying, submerging என்று சொன்னேன்.

ஆழ்வாா்கள் பாடல்களை மொழிபெயா்த்த அமெரிக்க அறிஞா் பெரும் பேராசிரியா் ஏ.கே. இராமானுஜன்.  The Drowning என்று மொழிபெயா்த்திருந்ததால் அதைச் சொல்ல முடியாது போயிற்று. இப்படி இலக்கியத் திளைப்பில் வாழ்ந்து 5.2.2006 அன்று 87-ஆம் வயதில் மறைந்தாா். நல்லபெருமாளின் குடும்பத்தினா் அமெரிக்காவில் அவா் நினைவைப் போற்றியபடி வாழ்கின்றனா்.

கம்பா் கவிநயச் செல்வரின் நூற்றாண்டு நிறைவில் அவா் வளா்த்த இலக்கியச்சுவைத் தோ்ச்சி செழிக்குமாக!

கட்டுரையாளா்:

இயக்குநா்,

மொழிபெயா்ப்புத்துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT