செய்திகள்

ஓடிடியில் புகைப்பிடித்தல் எச்சரிக்கை வாசகம் கட்டாயம்!

DIN

ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களிலும் புகைப்பிடித்தல் வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. புகைப்பிடித்தல், மதுபானங்கள் உபயோகித்தல் உள்ளிட்ட காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும்.

ஆனால், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்கள், இணைய தொடர்களுக்கு தணிக்கை அவசியமில்லை.

இந்நிலையில், ஓடிடி தளத்தில் இனி வெளியாகும் படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மீறும் படக்குழு மீது மத்திய சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT