நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க- ஏகே 62-க்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்?
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்குப் பின் ரஜினி ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.