'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் மாதம் 1ஆம் நாள் திரையரங்கில் வெளியானது. முதல்நாள் மலையாளத்தில் மட்டுமே ரிலீஸ் ஆனது. அடுத்தநாள் தமிழிலும் வெளியானது.
கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது முகநூல் அதிரடியாக கருத்து கூறியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:
நான் உண்மையாகவே மணீஷ் நாராயணன், பரத்வாஜ் ரங்கன், ப்ளூசட்டை மாறன் விமர்சனங்களுக்கு காத்திருக்கிறேன். என்னுடைய உழைப்பிற்கு இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
'கோல்டு' படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு இயக்குநரின் அதிரடி பதில்!
பரத்தின் 50வது படத்தில் வாணி போஜன்: டீசர் எப்போது?
பூஜையுடன் தொடங்கியது விஜய்-67 படம்
‘அம்மா சாப்ட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா?’- ரசிகர்கள் கிண்டல்!
‘முப்பது வருட முயற்சி, வியர்வை...’: வைரலாகும் பாடலாசிரியர் ட்வீட்!