ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து ‘ரத்தசாட்சி’ எனும் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் ஆகியவை தங்களின் வரவிருக்கும் படத்தின் தலைப்பை "ரத்தசாட்சி" என நவம்பர் 7ஆம் தேதி அறிவித்தது. ‘பொன்னியின் செல்வன்’ , ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற திரைப்படங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்று ‘கைதிகள்’. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே இந்தப்படம்.
இப்படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளது. தற்போது படத்தின் டிரைலரை நடிகர் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்தின் டீசர் வெளியானது!
டிச. 9-ல் 'துணிவு' படத்தின் முதல் பாடல் ரிலீஸ்
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்கள்!
‘ப்ளூசட்டை’ விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்: கோல்டு இயக்குநர்
'கோல்டு' படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு இயக்குநரின் அதிரடி பதில்!
‘அம்மா சாப்ட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா?’- ரசிகர்கள் கிண்டல்!