பிரபல நடிகர் யோகி பாபு, கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு, கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். இதுகுறித்த தகவலையும் புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.